Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Friday, August 22, 2008

மனித நேயம் இருக்கிறதா? இல்லையா?

மனித நேயம்னா என்ன, ஒருதருகொருத்தர் அனுசரணையா இருக்கணும், நம்மளால முடிஞ்சவரைக்கும் அடுத்தவங்களுக்கு உதவி பண்ணலாம்.. சின்ன வயசுல School ல Miss "Moral of the story, should be kind to everyone, etc., etc.,"சொல்லறப்ப மண்டைய மண்டைய ஆட்டிட்டு...இப்ப எப்படி எல்லாருமே சுயநலமா இருகாங்க ...


அதுக்காக இருக்கற வேலைய விட்டுட்டு சமூக சேவை பண்றதுக்கு கூப்பிடல, இயந்திரம் மாதிரி ஓடிகிட்டிடுருக்க வாழ்கையில மனித நேயத்த ஒரு புள்ளியா சேர்த்துக்கலாமில்லையா?
என்னோட கேள்வி, நம்ம சமுதாயத்துல மனித நேயம் இருகிறதா இல்லையா ?

இது கொஞ்ச நாளாகவே என் மனசுல இருக்கிற உறுத்தலான கேள்வி .. நேற்று நடந்த ஒரு சம்பவம் இப்படி எழுதற வரைக்கும் கொண்டு வந்து விட்டிருக்கு.

பொதுவாகவே தாம்பரம் - வேளச்சேரி ரொம்பவே Busy ஆன route ..அதுவும் காலைல சொல்லவே தேவையில்ல அவ்வளவு பரபரப்பா எல்லாரும் வேகமா நடந்துட்டு இருப்பாங்க (ரயில்வே station க்கு உள்ள போறவங்களா இருக்கட்டும் இல்ல வெளிய வரவங்களா இருக்கட்டும் எல்லாருமே அப்படிதான்.. இவங்களோட நடந்து வரதுனால நமக்கு வேலை இருக்கோ இல்லையோ நாமளும் வேகமா நடந்து தான் ஆகணும்) ரயில்வே station e இப்படினா பஸ் ஸ்டாண்ட பத்தி சொல்லவே வேணாம்.


இந்த வேலைக்குபோகிற கூடத்தில 22-30 வயதுள்ளவங்க தான் அதிகம்.

நேத்து அதிசயமா தாம்பரம் - திநகர் (சொகுசு பேருந்து)பஸ் ரொம்பவே Free a வந்தது. Ladies seat இல் இரண்டே பேர் தான் என்னையும் சேர்த்து. Gents seats கொஞ்ச நேரத்துல full ஆகிடுச்சு. Bus Terminus ல இருந்து கிளம்பின அப்பறம் 2 Physically challenged persons ஏறினாங்க, (தமிழ்ல தனித்திறன் கொண்டவர்கள், இவர்கள் கண்கள் இருந்து கண்ணிலாதவர்கள் ) ஒருத்தர் யாரோட உதவியுமில்லாம என் பக்கத்துல வந்து உட்கார்ந்து கொண்டார், மற்றொருவர் Gents side seats ல போய் தொட்டு பார்த்து seats எல்லாம் full என்று அந்த இடத்திலேயே நின்றுவிட்டார்.


பக்கத்துல conductor tickets கொடுத்துட்டு இருந்ததால அவர் ladies seat ல உட்கார வைப்பாரென்று பார்த்தேன், இல்ல வேற யாரவது எழுந்து அவருக்கு இடம் கொடுப்பாங்க என்று நினைத்தேன் அதுவுமில்ல, எல்லாரும் எப்படி இத பாத்துட்டு சும்மா இருகாங்க? இல்ல இருக்க முடியுது. இது ஒரு சின்ன உதவி தானே ஏன் அவருக்கு உதவி பண்ணனும்னு யாருக்கும் தோனல ? இத 2 நிமிடம் பார்த்த என் மனது இப்படி உறுத்துதே? அந்த பஸ் ல 15 பேராவது அவரை பார்திருபாங்க, அவங்க யாருக்கும் உறுத்தலையா?

நான் அவரை போய் கூட்டிட்டு வந்து என்னோட seat ல உட்காரவெச்சுட்டேன்.


அவங்ககிட்ட தன்னம்பிக்கை நம்ம எல்லாரையும் விட நிறையவே இருக்கு, நாம உதவி பன்னனும்னோ இல்ல எழுந்து இடம் கொடுக்கனும்னோ அவங்க எதிர்பார்கலை. சந்தோஷமா ஒரு மணி நேரம் கூட நின்னுகிட்டே travel பண்ணுவாங்க, ஆனா "அவங்களுக்கு இடம் தரலாமா வேணாமா, நாம இன்னும் ஒரு மணி நேரம் போகணுமே, கூட்டதில எப்படி நின்னுட்டு போறது, சரி வேற யாரவது எழுந்து இடம் கொடுப்பாங்க" என்று இந்த மன உருத்தலோடtravel பண்ணுகிற மனிதர்கள் தான் "ஊனமுற்றவர்கள்".
அவங்களை ஒப்பிட்டு பார்த்தா நமக்கு தான் ஆயிரம் குறைகள் இருக்கிறது. "முதியோர்/ஊனமுற்றோர்" இப்படி அவங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை தருவதற்கு மனதிற்குள் இத்தனை போராட்டமா இல்லை அத்தனை சுயநலமா ?


நான் வருகிற மற்றொரு route லையும் இப்படி தான் நடக்குது. கணவன், மனைவி இரண்டு பேருமே தனித்திறன் கொண்டவர்கள் தான் (நான் முதலிலேயே கூறியது போல கண்கள் இருந்தும் கண்ணிலாதவர்கள்), Daily ஒரே bus ல தான் parrys வரைக்கும் போவாங்க. அவங்க ஏறினதும் 1st seat ல உட்கார்ந்திருகிரவங்களோட முகம் எப்படி மாறும் தெரியுமா? என்னமோ இவங்க சொத்தை அவங்களுக்கு தாரைவார்க்கிற மாதிரி, எழுந்து இடம் விடுவாங்க...இப்படி பட்டவங்க கூட பரவாயில்லை அவங்க ஏறுவதை பார்த்தே தூங்குவது போல நடிப்பாங்க, சீ எத்தனை கேவலம்.


சக மனிதனோட உணர்வுகளை புரிந்துகொள்ள முடியாத ஒருவன் அல்லது புரிந்து கொண்டு சுயநலத்திற்காக மட்டுமே வாழ்கிற ஒருவனை எப்படிங்க ஆறு அறிவுள்ள மனிதன்னு சொல்ல முடியும். விழுந்து விழுந்து சமூக சேவை பண்ண வேணாம் ஆறறிவுள்ள மனிதனா இருக்கலாமே!!

Monday, August 4, 2008

Headsets - Mobiles



Bus, Train எங்கே பார்த்தாலும் 10 க்கு 6 பேர் தங்களது Ipod, Mp3 players, Musicplayer Mobile, FM Mobile ஏதாவது ஒன்றில் காதில் Headset ஐ மாட்டிக்கொண்டு இருப்பார்கள். அதிலும் இப்பொழுது ஆண்களை விட பெண்களே அதிகமாக பயன்படுத்துகிறார்கள்.

Bus, Train, Bike, car, auto, share-auto, ... என்று பாரபட்சமில்லாமல் எதில் சென்றாலும் காதில் headphone ஐ மாட்டிக்கொண்டு அலையும் மக்களை பார்க்கலாம். (நடக்கும் போது கூட விட்டுவைக்க மாட்டாங்க .......யாருப்பா இத கண்டுபிடிச்சது)

நான் தான் train ல பார்க்கிறேனே..... இந்த கையிலHandbag அந்த கையில Lunchbag என்று தூக்கிகொண்டு Train வந்ததும் அவசரம் அவசரமாக ஓடி வந்து ஏறுவார்கள் அரக்கபரக்க ஜன்னலோர seat இருக்கிறதா என்று பார்த்து விட்டு ஏதாவது ஒரு இடத்தில் அமருவார்கள் .... அந்த அவசரம் கொஞ்சம் கூட குறையாமல் handbag ஐ திறந்து Headset ஐ எடுத்து Mobile இல் connect பண்ணி காதில் மாட்டிகொள்வர்.......(ஒரு நிமிஷத்த கூட waste பண்ண மாட்டாங்களாம்)..
அதான் இருக்கவே இருக்கே Suryan FM ல ஆரமிச்சு ஏதேதோ FM னு 10 stations a tune பண்ணி ஒரு பாட்டையும் உருப்படியா கேட்கிறது கிடையாது...


கொஞ்ச காலத்துக்கு முன்னாடி (அட headset நம்ம மக்களோட ஒன்றி போறதுக்கு முன்னாடிங்க.....) train ல யாரவது ஒருத்தவங்க paper வாங்கிட்டு வருவாங்க ... அதை அவங்க படிக்கறாங்களோ இல்லையோ அந்த compartment ல பாதி பேர் கடன் கேட்டு தங்களோட அறிவை வளர்த்துக்குவாங்க ... இப்ப அந்த scene லாம் romba romba rare ங்க ...

இப்படி தான் அன்னைக்கு ஒரு நாள் நான் AJAX (இது stopping பேருங்க) போற Shareauto ல உட்காந்திருந்தேன், ஒரு பொண்ணு காதுல headset ஓட வேகமா வந்தா auto-Driver கிட்ட ஏதோ கேட்டுவிட்டு ஏறி என்னருகே அமர்ந்துகொண்டாள்...நான் முன்பே கூறியது போல இருக்கற எல்லா station ஐயும் tune பண்ணி tune பண்ணி பாட்டு கேட்டுக்கொண்டே வந்தாள்...30 நிமிடம் கடந்திருக்கும்.........பீச் ரோட்டில் ஆட்டோ வேகமாக சென்று கொண்டிருந்தது ...திடீரென அந்த பெண் ரொம்பவும் பரப்பானாள் சுற்றி சுற்றி பார்த்தாள்................"Driver இது AGASTHIYA போற auto இல்லையா" (அட இதுவும் stopping பேருதாங்க ...North Chennai ல இருக்கறவங்களுக்கு பரீட்சையமான stoppings......தெரியாதவர்களுக்கு AJAX , திருவொற்றியூரில் உள்ளது .. AGASTHIYA புது வண்ணாரபேட்டையில் உள்ளது)



கதை கெட்டுது போ ... நான் AGATHIYA போகுமா னு தான கேட்டேன் என்று அந்த பெண் கேட்க ... நான் AJAX போகுதுனுதானமா சொன்னேன், நீ தான் மா தப்பா கேட்டுட்டு ஏறிட்ட என்று Driver கூற (Unmailaye idhuku naan saatchinga ....) asusual சண்டை கொஞ்சம் பெருசாகிவிட்டது..கடைசியில் Driver, அட என்னமா நீ ஆட்டோவ விட்டு கீழ எறங்குமா பெருசா காதுல என்னத்தையோ (Headset) மாடிக்கவேண்டியது, எதையும் காதுல வாங்காம ஏறிட்டு எங்க உயிரை வாங்கவேண்டியது, எரங்கித்தோல மா இருக்கவங்களை வீட்டுக்கு கொண்டு சேக்கவேனமா...இப்பொழுது டிரைவரோடு 3-4 பயணிகளும் சேர்ந்து
கொண்டு அந்த பெண்ணை திட்ட, வேறு வழி இல்லாமல் முனகிக்கொண்டே இறங்கினாள்...........பிறகென்ன அடுத்த 10-15 நிமிடங்களுக்கு ஆளாளுக்கு அவளையே திட்டி கொண்டு வந்தார்கள்.....இதெல்லாம் தேவை தானா !!!!!!

TV, CD, DVD னு வந்த பிறகு ... வானொலியை யாரும் சீண்டவே இல்லை..
வானொலியில் வரும் பல நல்ல நிகழ்சிகளையும் யாரும் பொருட்படுத்தவில்லை..அதன் இருப்பிடம் மங்கிக்கொண்டே வந்தது.... FM ரேடியோ facility உடன் Mobiles வந்த பிறகு மீண்டும் வானொலி புத்துயிர் பெற்றிருப்பது மிகவும் வரவேற்கத்தக்கதே...ஆனா நம்ம ஆளுங்க இருக்காங்களே எதுவாக இருந்தாலும் கொஞ்சம் Over Dose ஆ தான் எடுத்துப்பாங்க....

நீ ipod ல பாட்டு கேட்டா, நான் FM பாட்டு கேட்டுட்டு போறேன்....நீ மட்டும் தான் skip பண்ணுவியா நானும்அடுத்த station tune பண்ணுவேன்....இதுல Musicplayer oda Mobile வெச்சுருக்கவனெல்லாம் Basic Model வெச்சுருக்கவன பாது ஒரு அலட்சியமான look விடுவான் பாருங்க (நேர்ல chance கிடைச்சா பாருங்க அப்பதான் அந்த feel புரியும் உங்களுக்கு)...
இவ்வளவு சிக்கலுக்கு மேல தினமும் 2 மணி நேரத்திற்கு மேல் headset இல் பாட்டு கேட்டாலோ இல்லை mobile இல் கடலை வறுத்து கொண்டிருந்தாலோ செவிப்பறை (அதாங்க EARDRUM) பாதிப்படையுமாம். 30 வயதுக்கு மேல் காது கேட்கும் திறம் குறைந்துகொண்டே வருமாம்....
ஹ்ம்ம் இதெல்லாம் தெரிந்தும் daily நான்கு மணி நேரம் headset a மாட்டிகிட்டு தாங்க அலையறேன்...புதுப்பாட்டு பழையபாட்டுனு எதையும் விட்டு வைக்கறதில்ல.....Mobile ல load பண்ணின songs கேட்டு போரடிச்சுடுச்சனுனா FM பக்கம் போய் அங்கேயும் எந்த station ஐயும் விட்டு வைக்கறதில்ல..ஆனா இன்னும் எந்த auto-driver கிட்டயும் திட்டு வாங்கலைங்க....
யவரேனும் இந்த பாகங்களை அறிந்து இந்த பழக்கத்திலிருந்து விடுபட்டிருந்தால் அந்த முறையை சற்று விளக்கவும் .....

Thursday, July 31, 2008

பிரிவு

வழக்கம் போல காலையில் alarm இன் உதவியால் எழுந்தேன். Office kக்கு கெளம்ப ஆயத்தமானேன் .. குளித்து விட்டு வந்ததும் அம்மா , tiffin என்ன மா பண்ணட்டும் தோசை வார்த்து தரவா, இல்ல சேமியா உப்மா பண்ணவா..Bread இருக்கு bread omlette போடவா ..

daily இதே வேலையா போச்சு மா உனக்கு ஏதாவது பண்ணிதாயேன் ..நீ ஏதாவது மனசுல யோசிச்சு வெச்சுருப்ப எது தரனும்னு அத பண்ணு சும்மா என்னையே கேட்டுட்டு இருக்காத ..

நீ தான நேத்து சொன்ன தோசை bore னு அதான் கேட்டேன்......

… அதான் bore னு சொல்லிட்டேன் ல அப்றம் என்ன கேள்வி ..ஏதாவது பண்ணு காலைலேயே tension ஏத்தாத ..

அம்மா water bottle ல இப்ப தான் தண்ணி fill பண்றியா already 10mins late..breakfast a bag ல தான் வெச்சு தாயேன் ..coffee a first e போட்ருக்கலாம் ல எவ்ளோ hot a இருக்கு எனக்கு வேணாம் late ஆயுடுச்சு.....

..2mins iru மா ஆரவெச்சு தந்துடறேன் வெறும் வயரோட போகாத..

..அதெல்லாம் வேணாம் இப்படிஒரு நாள் பண்ணினாதான் நாளைக்கு சீக்கிரமா போட்டு வெப்ப .Bye..

Daddy 100rs ku change வேணும் னு சொன்னேனே இன்னுமா கிளம்பாம இருக்கீங்க, paper mart ல change மாத்தி வையுங்க வரேன் …Mummy bye.. என்ன daddy இவ்ளோ slow a வறீங்க இதுக்கு நானே வந்து change மாத்திருக்கலாம்..சீக்கிரமா வாங்கி தாங்க ..

தோ வரேன் டா நீ நடந்துகிட்டே இரு ..

bus வந்துடுச்சு daddy mobile தாங்க, lunch bag ..fast..

bus கூட்டமா இருக்கே, இன்னைக்கும் standing தான் போல பாத்து போமா …beach station போனதும் call பண்ணு . ....

எனக்கு தெரியாதா standing னு நான் பாத்துகறேன் ..Bye.

Tondiarpet stop…Call from home…asusual daddy தான் ..

எங்க மா போயிட்டுஇருக்க ............

Tondiarpet..

Seat கிடைச்சுதா இல்ல standing ஆ..

standing..

என்ன மா tiruvottriyur, tolgate stopping ல கூடவா seat கிடைகல ..

அதான் standing னு சொல்றேன் ல seat kidaichum உட்காராத மாதிரி பேசறீங்க....

இல்ல மா எவ்வளவு நேரம் அந்த கூடத்துல நின்னுடே போவ .....

அதான் daily போறேனே … சரி வேற என்ன ..

Beach போனதும் call பண்ணு ..

Bye..

Reached Beach..Call from Home.. இப்ப Mummy...

Beach வந்துட்டியா மா..

இப்ப தான் bus ல இருந்து ஏறங்கறேன் அதுக்குள்ள என்ன போன் அதான் நானே பன்றேனேன் ல ..

சரி சரி நீ ஏறங்கிருப்ப னு நெனச்சேன் ..

பரவால்ல சொல்லுங்க ..

சேமியா உப்மா தான் வெச்சுருக்கேன் train la சாப்பிடு மா ..

Spoon??

வெச்சுருக்கேன் மா …dry grapes வெச்சுருக்கேன் ..evening train ல வரும்போது சாப்பிடு ..
Sari.

Tambaram ஏறன்கினதும் call பண்ணு .. சரி bye train ல ஏறிட்டேன் .. பாத்து போடா..

சரி Bye….

ராத்திரி மணி 3…PG ல எல்லோரும் தூங்கிட்டாங்க ..2 துளி கண்ணீருடன் …I Miss U mum n dad!!



Morning 6clk !! call from home..Mummy தான் ..



Night நல்லா தூங்கினியா டா !!..



நல்லா தூங்கினேன் MUMMY (தூங்கல னு சொல்லி கஷ்டப்படுத்த வேண்டாம் )

Wednesday, July 30, 2008

Memories

I Love memories.. because they don't change while everything and everyone change!!