Monday, August 4, 2008

Headsets - Mobiles



Bus, Train எங்கே பார்த்தாலும் 10 க்கு 6 பேர் தங்களது Ipod, Mp3 players, Musicplayer Mobile, FM Mobile ஏதாவது ஒன்றில் காதில் Headset ஐ மாட்டிக்கொண்டு இருப்பார்கள். அதிலும் இப்பொழுது ஆண்களை விட பெண்களே அதிகமாக பயன்படுத்துகிறார்கள்.

Bus, Train, Bike, car, auto, share-auto, ... என்று பாரபட்சமில்லாமல் எதில் சென்றாலும் காதில் headphone ஐ மாட்டிக்கொண்டு அலையும் மக்களை பார்க்கலாம். (நடக்கும் போது கூட விட்டுவைக்க மாட்டாங்க .......யாருப்பா இத கண்டுபிடிச்சது)

நான் தான் train ல பார்க்கிறேனே..... இந்த கையிலHandbag அந்த கையில Lunchbag என்று தூக்கிகொண்டு Train வந்ததும் அவசரம் அவசரமாக ஓடி வந்து ஏறுவார்கள் அரக்கபரக்க ஜன்னலோர seat இருக்கிறதா என்று பார்த்து விட்டு ஏதாவது ஒரு இடத்தில் அமருவார்கள் .... அந்த அவசரம் கொஞ்சம் கூட குறையாமல் handbag ஐ திறந்து Headset ஐ எடுத்து Mobile இல் connect பண்ணி காதில் மாட்டிகொள்வர்.......(ஒரு நிமிஷத்த கூட waste பண்ண மாட்டாங்களாம்)..
அதான் இருக்கவே இருக்கே Suryan FM ல ஆரமிச்சு ஏதேதோ FM னு 10 stations a tune பண்ணி ஒரு பாட்டையும் உருப்படியா கேட்கிறது கிடையாது...


கொஞ்ச காலத்துக்கு முன்னாடி (அட headset நம்ம மக்களோட ஒன்றி போறதுக்கு முன்னாடிங்க.....) train ல யாரவது ஒருத்தவங்க paper வாங்கிட்டு வருவாங்க ... அதை அவங்க படிக்கறாங்களோ இல்லையோ அந்த compartment ல பாதி பேர் கடன் கேட்டு தங்களோட அறிவை வளர்த்துக்குவாங்க ... இப்ப அந்த scene லாம் romba romba rare ங்க ...

இப்படி தான் அன்னைக்கு ஒரு நாள் நான் AJAX (இது stopping பேருங்க) போற Shareauto ல உட்காந்திருந்தேன், ஒரு பொண்ணு காதுல headset ஓட வேகமா வந்தா auto-Driver கிட்ட ஏதோ கேட்டுவிட்டு ஏறி என்னருகே அமர்ந்துகொண்டாள்...நான் முன்பே கூறியது போல இருக்கற எல்லா station ஐயும் tune பண்ணி tune பண்ணி பாட்டு கேட்டுக்கொண்டே வந்தாள்...30 நிமிடம் கடந்திருக்கும்.........பீச் ரோட்டில் ஆட்டோ வேகமாக சென்று கொண்டிருந்தது ...திடீரென அந்த பெண் ரொம்பவும் பரப்பானாள் சுற்றி சுற்றி பார்த்தாள்................"Driver இது AGASTHIYA போற auto இல்லையா" (அட இதுவும் stopping பேருதாங்க ...North Chennai ல இருக்கறவங்களுக்கு பரீட்சையமான stoppings......தெரியாதவர்களுக்கு AJAX , திருவொற்றியூரில் உள்ளது .. AGASTHIYA புது வண்ணாரபேட்டையில் உள்ளது)



கதை கெட்டுது போ ... நான் AGATHIYA போகுமா னு தான கேட்டேன் என்று அந்த பெண் கேட்க ... நான் AJAX போகுதுனுதானமா சொன்னேன், நீ தான் மா தப்பா கேட்டுட்டு ஏறிட்ட என்று Driver கூற (Unmailaye idhuku naan saatchinga ....) asusual சண்டை கொஞ்சம் பெருசாகிவிட்டது..கடைசியில் Driver, அட என்னமா நீ ஆட்டோவ விட்டு கீழ எறங்குமா பெருசா காதுல என்னத்தையோ (Headset) மாடிக்கவேண்டியது, எதையும் காதுல வாங்காம ஏறிட்டு எங்க உயிரை வாங்கவேண்டியது, எரங்கித்தோல மா இருக்கவங்களை வீட்டுக்கு கொண்டு சேக்கவேனமா...இப்பொழுது டிரைவரோடு 3-4 பயணிகளும் சேர்ந்து
கொண்டு அந்த பெண்ணை திட்ட, வேறு வழி இல்லாமல் முனகிக்கொண்டே இறங்கினாள்...........பிறகென்ன அடுத்த 10-15 நிமிடங்களுக்கு ஆளாளுக்கு அவளையே திட்டி கொண்டு வந்தார்கள்.....இதெல்லாம் தேவை தானா !!!!!!

TV, CD, DVD னு வந்த பிறகு ... வானொலியை யாரும் சீண்டவே இல்லை..
வானொலியில் வரும் பல நல்ல நிகழ்சிகளையும் யாரும் பொருட்படுத்தவில்லை..அதன் இருப்பிடம் மங்கிக்கொண்டே வந்தது.... FM ரேடியோ facility உடன் Mobiles வந்த பிறகு மீண்டும் வானொலி புத்துயிர் பெற்றிருப்பது மிகவும் வரவேற்கத்தக்கதே...ஆனா நம்ம ஆளுங்க இருக்காங்களே எதுவாக இருந்தாலும் கொஞ்சம் Over Dose ஆ தான் எடுத்துப்பாங்க....

நீ ipod ல பாட்டு கேட்டா, நான் FM பாட்டு கேட்டுட்டு போறேன்....நீ மட்டும் தான் skip பண்ணுவியா நானும்அடுத்த station tune பண்ணுவேன்....இதுல Musicplayer oda Mobile வெச்சுருக்கவனெல்லாம் Basic Model வெச்சுருக்கவன பாது ஒரு அலட்சியமான look விடுவான் பாருங்க (நேர்ல chance கிடைச்சா பாருங்க அப்பதான் அந்த feel புரியும் உங்களுக்கு)...
இவ்வளவு சிக்கலுக்கு மேல தினமும் 2 மணி நேரத்திற்கு மேல் headset இல் பாட்டு கேட்டாலோ இல்லை mobile இல் கடலை வறுத்து கொண்டிருந்தாலோ செவிப்பறை (அதாங்க EARDRUM) பாதிப்படையுமாம். 30 வயதுக்கு மேல் காது கேட்கும் திறம் குறைந்துகொண்டே வருமாம்....
ஹ்ம்ம் இதெல்லாம் தெரிந்தும் daily நான்கு மணி நேரம் headset a மாட்டிகிட்டு தாங்க அலையறேன்...புதுப்பாட்டு பழையபாட்டுனு எதையும் விட்டு வைக்கறதில்ல.....Mobile ல load பண்ணின songs கேட்டு போரடிச்சுடுச்சனுனா FM பக்கம் போய் அங்கேயும் எந்த station ஐயும் விட்டு வைக்கறதில்ல..ஆனா இன்னும் எந்த auto-driver கிட்டயும் திட்டு வாங்கலைங்க....
யவரேனும் இந்த பாகங்களை அறிந்து இந்த பழக்கத்திலிருந்து விடுபட்டிருந்தால் அந்த முறையை சற்று விளக்கவும் .....

9 comments:

Paul Rajan J said...

enaku theriyum thituvanganathu neegathan endru.naa yarukitayum sollamatane.

Vapurdha said...

naan dhan solrene Unmaikke kaalam illa da Narayanaa

Unknown said...

Dialogue ellam nalla thaaa iruku...but blog ezhuthanavanga le headset maatikitu pona....athu migai aaagaaathu.....Adutha murai antha pennai paaarthaaal en phone numberai tharavum....naaan nallathu ethu kethathu ethuvendru solli tharuven...

Vapurdha said...

enna panradhu Anto andha pazhakatha vida mudiyala e..

Adutha murai andha pennai paarthal unnoda phone aparam un amma oda phone number um tharen podhuma..

JSTHEONE said...

gud narration

Vapurdha said...

Thank you very much..

Anonymous said...

பெரிய post ஐ சுவாரசியமாக எழுதிருக்கீங்க. நல்லதாரு ஸ்டைலை உங்களுக்கென வச்சிருக்கீங்க. சூப்பரு.

Vapurdha said...

//hisubash said...
பெரிய post ஐ சுவாரசியமாக எழுதிருக்கீங்க. நல்லதாரு ஸ்டைலை உங்களுக்கென வச்சிருக்கீங்க. சூப்பரு.//

:)) Thank you

Senthil Prabu said...

Friendz-kita share pannina mathiri yeluthi irukinga...

but nice one...

Mind-la vachukaren...