தொடர் பதிவு போடுவது சிறிது கால தாமதம் ஆகுமென நினைக்கிறேன் (நிஜமாகவே ஆபீஸ் ல கொஞ்சம் பிஸி...... OB அடிச்சு பதிவு எழுத முடியாத நிலை)
அதற்காக இந்த சும்மா பதிவு ..... (கொஞ்சம் பொறுத்துக்கோங்க :)))))
ரசனை ...
ரசிக்கவே தோன்றுகிறது விளைவுகளை பற்றி எண்ணாமல் ..
எனக்காகவே சிலவற்றை நீ செய்வதும்
உனக்காகவே சிலவற்றை நான் செய்வதும்
ரசிக்கவே தோன்றுகிறது..
........................................................................
உன்னை பிரிந்தேனே !!
இரவும் எனக்கு பகலாகிப்போகும் என நினைக்கவில்லை
உன்னை பார்க்காத வரை ..
உன்னிடம் இருந்து விலகிய பின்பு ...
என் இரவுகள் அனைத்தும் நிரந்தரமாக பகலாகிப்போனதே !!
...........................................................
கண்ணீர் !!
நீ என்னை பிரியும் வேளையில்
அதை காண முடியாமல் செய்த
கண்ணீருக்கு நன்றி கூறுகிறேன் !!
..............................................................................
உன் பிரிவில் ....
எனக்கும் கவிதை எழுதத்தெரியுமென
கற்றுக்கொடுத்தாய் !!
நான் எழுதிய கவிதைகளை
நானே மறந்தாலும் நீ எனக்கு
நினைவுபடுத்தினாய் !!
இதை பற்றி எழுது அதை பற்றி எழுது
என ஊக்கப்படுதினாய் !!
நான் எப்பொழுதும் உன்னை பற்றியே
கவிதை எழுத வேண்டுமென
என்னை பிரிந்தாயோ ??

