
அசராமல் பேசியே உன் நினைவுகளின்
பாரத்தை என்னிடம் விட்டுச்செல்கிறாய் !!
அசந்திடும் வேலையிலும் பாரத்தை
சுமக்கின்றேன் சுகமான வலியோடு !!
Hero: அப்படியா பண்ணினான் அவன், அவனுக்கு தெனாவட்டு அதிகமாஆகிடுச்சு அதான் இப்படி எல்லாம் பண்ணிட்டு திரியறான். நான் யாருனு ஒரு காட்டு காட்டினா தெரியும்.
Heroine: வேணாம் விடு, இத பெரிய பிரச்சனையா போய் சண்டையெல்லாம் போடாத . அப்பறம் உன்ன எதாவது பண்ணிடபோறான்
Hero: உனக்கு என்ன பைத்தியம் பிடிச்சுருக்கா? இந்த ஏரியா ல நான் எப்படி பட்டவன்னு உனக்கே தெரியும். தெரிஞ்ச நீயா இப்படி பேசற.
Heroine: எனக்கு தெரியாதா உன்ன பத்தி. ஆனா அவன் இந்த ஏரியா வுக்கு புதுசு, அவனுக்கு எப்படி உன்ன பத்தி தெரியும். அதோட அவன் GYM வேற வைச்சு நடத்தறான். ஆள் பலம் உன்ன விட அதிகம் அதனால தான் சொல்றேன். எனக்கு நீ முக்கியம், ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்குற.
Hero: நா சொல்றது எதையும் நீ கேக்காத, ஆனா நீ சொல்றத மட்டும் நா கேக்கனுமா? உன்ன அவன் இருக்கற பக்கம் போகாத, அவன் ஒரு மாதிரினு போன வாரமே சொன்னேன். பின்ன ஏன் போன?
Heroine: Lousie தான் கூப்பிட்டா, அந்த Bakery க்கு போகலாம்னு. நீ திட்டுவ போகவேணாம்னு சொன்னேன் அவ தான் Compell பண்ணி கூட்டிட்டு போய்ட்டா.
Hero: அவனோட Bakery னு தெரிந்தே போயிருக்க நீ. இனிமேல் அவளோட சேராத
Hero Friend Entry......
Friend: என்ன டா மச்சான் கடுப்பா இருக்க? உங்களுக்குள்ள ஏதாவது பிரச்சனையா sister?
Hero: அவன் அடங்கமாட்டான் போல டா, இன்னைக்கு என் ஆளு மேலையே கை வெச்சுருக்கான்..
Friend: என்ன டா மாப்ள சொல்ற? யாருடா நம்ம sister மேலேயே கை வெச்சது? கதை கேட்டுட்டு இருக்கியா நீ, நான் போய் நம்ம பசங்கள கூட்டிட்டு வரேன். யாரா இருந்தாலும் போட்டுடலாம் இன்னைக்கு.
Hero: அந்த Flat ல புதுசா வந்துருக்கானே அவன் தான். Gym வெச்சுருந்தா பாயந்துடுவோமா நாம. Blood Boil ஆகுது மச்சி, நம்ம ராமு ஆளு மேல கைய வைச்சதுக்கே அவன போட்டுருக்கணும். தப்பு பண்ணிடோம் டா.
Heroine: வேணாம் நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க. எனக்கு ரொம்ப பயமா இருக்கு.
Hero: நீ வீட்டுக்கு போ. நாங்க பாத்துகறோம்.
Heroine: இல்ல ..
Hero: கெளம்பு னு சொல்றேன் ல. போ
Friend: இப்ப ஒன்னும் கெட்டுப்போகல டா. நீ tension ஆகாத மாப்ள இன்னைக்கு நாமா அவனா னு பாத்துடலாம். நான் போய் நம்ம பசங்கள கூட்டிட்டு வரேன், நீ வேணும்னா சொல்லு பக்கத்து ஏரியா பசங்களையும் support க்கு கூப்பிடுக்கலாம்.
Hero: ச்சிஅவனுக்கு நம்ம பசங்களே போதும் டா. ஏண்டா இவன் ஆளு மேல கைய வைச்சோம்னு அவன் நெனச்சு நெனச்சு feel பண்ணனும். உயிர மட்டும் உடம்புல விடனும் டா.
Friend: நீ இங்கேயே இரு, பசங்களோட வரேன்
Hero: ம் சரி சீக்கிரம் வா
.............................
Friend: வந்துடோம் டா. வா இப்ப போகலாம். அவன் Bakery a close பண்ணுற நேரம். இப்ப போனா correct a இருக்கும்.
அனைவரும் படைஎடுத்து Bakery முன் போய் நின்றனர்.
Bakery Owner: ச்சி நாய்களா, மிச்சம் மீதி தின்றதுக்குனே வந்துடுதுங்க, அந்த குச்சியை எடுமா. காலைல ரெண்டு நாய விரட்டினா, சாயுங்காலம் இத்தனை வந்து நிக்குது. இந்த area ல நாய்கள் தொல்லை இவ்வளவு அதிகமா இருக்கே. தே ச்சி ஓடுங்க !!!
நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்கள் என்னுடன் சேர்ந்து உன்னை பார்பதற்காக ஒற்றை காலில் நிற்கின்றன. என்னுடைய CAB 8 மணிக்குத்தான் என்றாலும், உன்னை பார்ப்பதற்கென்றே 7 மணிக்கே stopping க்கு வந்துவிடுகிறேனே. என்ன ஆயிற்று எனக்கு, 10 நாட்களுக்கு முன் நீ பார்த்த பார்வைக்கு இவ்வளவு சக்தியா. கல்லூரியில் நண்பர்கள்கூறிய போது கேலி செய்தேன், நூற்றுகணக்கில் கவிதைகளை படித்தும் நம்பவில்லை, முதல் பார்வை முதல் காதல் என்பதெல்லாம் திரைப்படத்தில் commercial க்காக மட்டுமே உபயோகிக்கிறார்கள் என்று நினைத்தேன். அத்தனையும் பொய்யடா அனுபவித்து பாரடா என்று மின்னல் பார்வையை வீசினாயே. ஆயிரம் megawatt இந்த சில 100 கிராமேயுள்ள சின்ன இருதயம் தாங்குமா என்று நினத்துப்பார்தாயா !!
கவி பாட எனக்கு தெரியாது. என்னை கவிஞனாக்கி விடுவாயோ? என்னுள் நிகழும் இந்த மாற்றம் என்னை எங்கு கொண்டு செல்லும் என்று தெரியவில்லை ஆனால் இதனை அனுபவிக்கத்தோன்றுகிறது.
பெண்ணுக்குள் இத்தனை நளினமா,
Oh Gaaadd!! gashhh!! என்னும் பெண்களிலிருந்து தனித்து நிற்கிறாயே, இந்த மென்பொருள் மாயை உன்னை பிடிக்கவில்லையா??
கண்டமேனிக்கு அலையாத வகுடெடுத்து வாரிய கூந்தல், மிக நேர்த்தியான உடை, மெல்லிய புன்னகை, Friday Casual wear அன்று கூட எந்த ஆர்ப்பாடமுமில்லாத ஜீன், குர்த்தா......... கட்டிப்போட்டுவிட்டாய் என்னை.
இத்தனை நாட்கள் எப்படி உன்னை பார்க்காமல் போனேன். ஆமாம் 2-3 வருடமாக இரவு பகல் என்று பாராமல் கணினி கணினி என்று அதன் பின்னால் தானே சுற்றிக்கொண்டிருந்தேன், அன்றைக்கு நான் கால் இடரும்போது "பாத்து" என்று நீ கூறாமல் போயிருந்தால் இதுநாள் வரை சத்தியமாக உன்னை பார்த்திருக்க மாட்டேன். பெரிய மாற்றத்தை என்னுள் ஏற்படுத்திவிட்டாய். என்ன வண்ணமயமான 10 நாட்கள். ஞாயிற்றுக்கிழமைக்காக காத்துக்கிடந்த காலங்கள் போக, உன்னை காணமுடயாத ஞாயிற்றுக்கிழமையை பிடிக்கவில்லை இப்பொழுது.
அதிகாலை வானம், மலைச்சாரல் , மண் வாசனை , சாலையோர பூக்கள் , பூக்களில் படிந்திருக்கும் பனித்துளி , இந்த காளானைக்கூட ரசிக்க வைத்து விட்டாயே :)
ஏன் நீ இன்னும் வரவில்லை , உனக்கு துணையாக ஆனால் உனக்கு நேர்மாறான இந்த ultra modern girl வந்துவிட்டாளே. இன்றைக்கு நீ வரமாட்டாயோ, உன்னை காணமல் எப்படி என் நாள் தொடங்கப்போகிறது.
அவளுடைய cab சென்று விட்டது. இந்த நாள் என்னைபொருத்தவரை கருப்பு நாள்.
நாளைக்கு தானே பார்க்க முடியும், கடிகார முள் நகருவேனா என்று அடம் பிடிக்கிறது.
..........
மூன்று நாட்களாகிவிட்டதே அவளுக்கு என்ன ஆயிற்று.. அவள் தோழியிடம் கேட்கலாமா, அவள் என்ன நினைப்பாள். என்ன நினைத்துக்கொண்டால் நமக்கென்ன கேட்டுவிடலாம்
அருகில் கூட செல்லவில்லை அனால் அவளின் செண்டின் நெடி ஆளையே தூக்கியது... English ல வேற பேசணும்..
Excuse me...
yeah !!
What happened to you friend? I am not able to see her for past 3 days
Do u know her?
...
She is on leave..she gonna get married man !! tomorrow is her wedding..
நெஞ்சு முட்டியது வார்த்தைகள் வரவில்லை...ஊமையாகி நின்றேன்..எனக்கு சொந்தாமான நினைவுகளில் அவளை வைத்திருந்ததால் அவள் எனக்கே சொந்தம் என்று நினைத்துவிட்டேன்
who r U?
.......
hallooo cud u hear me??
அவளிடமிருந்து விலகி நடந்தேன்.
Oh Gaadd....this guy must be mad !!
இயந்திர வாழ்கையிலிருந்து என்னை விலக்கி, பெண்மையையும் இயற்கையையும் ரசிக்க கற்றுகொடுத்தவள், என்னுள் வேதியல் மாற்றத்தை ஏற்படுத்திவிட்டு , வேறொருவனுக்கு சொந்தமாகப்போகிறாள் கொடுத்துவைத்தவன்.
மெல்லிய காற்று என்னை வருடி ஆறுதல் தந்தது, இயற்கையை ரசிக்கத்தான் கற்றுக்கொண்டேனே :)
வபூர்தா என்றால் என்ன ஏதாவது specific meaning இருக்கிறதா என்று ஒரே Fans தொல்லை (நம்பவில்லையா சரி விடுங்க, உண்மைய என்றைக்கு தான் இந்த நாடு நம்பிஇருக்கு.....)
வபூர்தா என்றால்"Granter of Beautifull appearence"... துர்க்கை அம்மனின் 108 பெயர்களில் ஒன்று ... இதில் இருந்து என் உண்மையான பெயர் துர்கா என்று கண்டுபிடித்துவிட்டீர்களா ...
சரி நாம கொஞ்சம் வித்யாசமா வலைபதிவுக்கு பெயர் வைக்கலாமே னு try பண்ணேன்....
ஒரு கூட்டம் நான் என்ன சொன்னாலும் நம்பாது...
அவங்களுக்காக இந்த சுட்டி ... http://www.123durgapuja.com/108-durga-names/