Tuesday, August 12, 2008

ம‌ன‌மே நீ ப‌ரிமாற‌த்தானோ! - மழைக்காலம் II



மழைகாலம் இடுகையை படிச்சுட்டு இத படிங்க... அப்பறம் புரியலைனா அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல..

படிச்சுட்டு நல்ல தலைப்பு தந்துட்டு போங்க..

எவ்வளவு நேரம் தான் இந்த விட்டத்தையே பார்த்துக்கொண்டிருப்பது, உன்னை காணாத ஒவ்வொரு நொடியும் யுகம் போலல்லவா உள்ளது. அந்த வலியை அனுபவித்துப்பார்த்தால் தானே புரிகிறது.

தோழி ஒருத்தி அவளுடைய காதலனை ஒரு நாள் காணாது புலம்பியபோது, "இதுல என்னடி இருக்கு நாளைக்கு தான் அவன பார்க்கப்போறியே ஏன் சும்மா புலம்பிகிட்டு இருக்க" என்று இந்த வாய் தானே கூறிற்று. அந்தந்த கஷ்டம் அவங்கவங்களுக்கு வந்தாதானே தெரியும்.

எக்காலத்து பெண்ணானால் என்ன தமிழ் பெண்ணுக்குரிய அச்சமும் நாணமும் இருக்கத்தானே செய்கிறது. நாளை அவனை காணப்போகிறேன் என நினைத்து சந்ஷோஷப்படுவதா, இல்லை இடையில் இன்னும் 24 மணி நேரம் உள்ளதே என்று வேதனைப்படுவதா. இந்த வானமும் எனக்காக கண்ணீர் சிந்துகிறதே.


பார்வையாலே பேசிக்கொண்டிருந்த பிரிவயே தாங்கிக்கொள்ள முடியவில்லயே..ஹ்ம்ம்

கைப்பேசி அழைத்து கவனத்தை திருப்பியது.

Sharon calling ....

சொல்லு Sharon ...

How u feel now, r u alright? ya, Im alright but need some rest, will get back to work 2mw. .

இன்னிக்கு காலைல உன் ஆளு வந்து நீ எங்க 3 days ஆ காணோம்னு கேட்டான்...

hey என்னடி சொல்ற நெஜமாவா...என்னால நம்பவே முடியல ...

ஆமா believe me... நான் சொன்னேன் ல ரெண்டு நாளா அவன் முகமே சரில்லை .. he was expecting u னு ... நீ தான் நம்பலை...

பின்ன என்னடி, அவன் மத்த பசங்கள மாதிரி இல்ல, பக்கத்துல எத்தனை பொண்ணுங்க இருந்தாலும் திரும்பிகூட பார்க்கமாட்டான். நாம தான் ஒரு மாசமா பார்த்துட்டு இருக்கோமே

சரி .. நீ என்ன சொன்ன ..

உனக்கு நாளைக்கு கல்யாணம் so லீவ் ல இருக்கனு பொய் சொன்னேன் ..

hey stupid gal, y did u lied him?..

பின்ன என்னடி எப்பவும் என்னப்பார்த்து ஏலனமாவே look விடறான், அதான் அப்படி சொன்னேன். அதோட உனக்கு கல்யாணம்னு சொன்னா அவன் reaction
எப்படி இருக்கும்னு test பண்றதுக்காகத்தான் அப்படி பொய் சொன்னேன். பாவம் நான் சொன்னதும் அவன் face ரொம்பவே dull ஆகிடுச்சு


அப்படியா !!

ம்ம் ஆமா ..

என்னடி இப்படி பண்ணிட்ட... ??

அதெல்லாம் ஒன்னும் ஆகாது, நீ இதையே நினைச்சுட்டு இருக்காத ... take rest நாளைக்கு பாக்கலாம்.

ஹ்ம்ம் சரி ..BYE

அவளுக்கு என்ன, நினக்காதே என்று கூறிவிடுவாள், தவிப்பது இங்கு நான் தானே.

இவளிடம் வந்து என்னைப்பற்றி கேட்டானா :) நம்பவே முடியவில்லையே. நிச்சயமாக அவனுடைய மனதில் எனக்கு இடம் இருக்கிறது. இது கனவொன்றும் இல்லையே??


நேற்று நடந்தது போல் இருக்கிறது. CAB க்காக நான் காத்துகொண்டிருக்கும்போது, எங்கிருந்தோ கைபேசியில் பேசிக்கொண்டே வந்தான் . அருகில் வருகிறான், இதுநாள் வரை தூரத்தில் பார்த்தவனை இன்றைக்கு தான் அருகில் பார்கிறேன். என்னால் பார்வையை திருப்ப முடியவில்லை. தீர்கமான நடை, எளிமையான உடை, தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கும் எண்ணம். நான் பார்ப்பதைக்கூட அவன் கவனிக்க வில்லை, கைபேசியின் உரையாடலிலே அத்தனை கவனம் .

திடீரென அவன் கால் தடுக்கிற்று, தன்னிலை அறியாமல் "பாத்து" என்று கூறி விட்டேன். அப்படியா அவனுடன் ஒன்றி விட்டேன்??. நான் கூறியது அவன் காதுகளில் விழுந்திருக்கும், சட்டென்று என்னை பார்த்தான், என்ன முழுமையான பார்வை. அந்த பார்வைலிருந்து என் கண்களை என்னால் மீட்க முடியவில்லை.


போதும் பார்க்காதே ! என்று உள்மனது கூறியும் கண்கள் கேட்க மறுக்கின்றன. என்னுள் ஏதோ மாற்றம் நிகழ்வதை நான் உணர்ந்தேன். CAB horn அடித்ததால் வேறு வழியின்றி திரும்பினேன். கால்கள் CAB ஐ நோக்கி சென்றாலும் கண்களை அங்கேயே விட்டுச்செல்கின்ற உணர்வு. எனக்கும் அவனுக்கும் ஏதோ புனர்ஜென்மத்து உறவு இருப்பது போல தோன்றியது.



அன்றிலிருந்து தினமும் அவனை பார்ப்பது தானாக அமைந்த சந்தர்ப்பம் என்றல்லவா நினைத்தேன்.

நாளைக்கு அவனை பார்க்க முடியுமா தெரியவில்லயே இந்த Sharon வேறு பெரிய குண்டைத்தூக்கி போட்டிருக்கிறாள்.

மறுபடியும் அதே விட்டம் .....

16 comments:

Paul Rajan J said...

"unarchigal"

kadhal enpathu oru unarchiyin velipadu. so i titled this story as "Unarchigal".

oru narthiyana muyarchi.

kadhayin mudivay ethirparkiroom..

Excellent.

JB said...

இதுக்கு ஒரு தொடர்ச்சி போடுவீங்கல்ல... அதையும் படிச்சுட்டு மொத்தமா ஒரு தலைப்பு கொடுத்திடலாம்....

JSTHEONE said...

1. ம‌னிதா! இது தான் ம‌ன‌து !

2. உண‌ர்வுக‌ள் !!!

3. என்ன‌ செய்கிறாய் ம‌ன‌மே!

4. உனை யாம் அறியேன் ம‌ன‌மே!

5. ம‌ன‌மே நீ ப‌ரிமாற‌த்தானோ!

i would go for any one of these titles...

narration was cool... bore eh adikula.... its insisting to read further...awaiting for the continuation....

g8 work.....

Unknown said...

"Uravughalin thavippu"... Enoda title epadi irukku... Because nee 1st hero a thavika vita ipa heroeine a thavikka viteta... So consider my title da

Vapurdha said...

@ paul indha kadhaikkum part III poduveengalo nu nenachen..

Titile miga arumai...Thank U vry much

Vapurdha said...

@ John...உங்க எதிபார்ப்பு புரியுது அடுத்த பகுதி எழுத முயற்சி பண்றேன்

Vapurdha said...

Saravanan, 5 titles pottu kalakiteenga...I liked

என்ன‌ செய்கிறாய் ம‌ன‌மே!and

ம‌ன‌மே நீ ப‌ரிமாற‌த்தானோ!..both r ultimate..rest also too gud..

thank u for your support

Vapurdha said...

:) Malli..thanks de..

Ur titile is too gud..coz of d reason u mentioned

Leo said...

hi de.. this is Maria... nalla iruku de....Kallaku.. ALl The Best..!!

Vapurdha said...

Thanks Maria

JSTHEONE said...

topic super ...hahaha thanks for choosing....i thought of suggesting one more as உண‌ர்வுக‌ளின் உர‌ச‌ல் but ur title suits correctly...

g8...
:-)

Anonymous said...

vera vala illaya unakku!!!!

just kidding !!!

kadhal oru kaanal neer is the title...

MSK / Saravana said...

அட. கலக்கல். கலக்கலோ கலக்கல்..
:)

//என்ன‌ செய்கிறாய் ம‌ன‌மே!
ம‌ன‌மே நீ ப‌ரிமாற‌த்தானோ!//

சரி.. இந்த கதையோட அடுத்த பகுதி எங்கே.. எப்போ எழுதுவீங்க..

நிச்சயம் எழுதணும்..

Vapurdha said...

அநேகமா நம்ம அடுத்த பதிவு மழைகாலம் III யாக தான் இருக்கும் .. எதிர்பார்புக்கு நன்றி !!

Anonymous said...

1ம் பாகமும் 3ம் பாகமும் வாசித்துவிட்டதால் எதிர்பார்ப்பு குறைவு.
ஆனா 4ம் பாகத்துக்கு வெயிட்டிங்.

Vapurdha said...

//hisubash said...
1ம் பாகமும் 3ம் பாகமும் வாசித்துவிட்டதால் எதிர்பார்ப்பு குறைவு.
ஆனா 4ம் பாகத்துக்கு வெயிட்டிங்.//

உங்களை யாரு 2 ஆம் பாகம் படிக்காம 3 ஆம் படிக்க சொன்னது. நானே கஷ்டப்பட்டு ஏதோ சொல்லறதுக்கு முயற்சி பண்றேன், இப்படியெல்லாம் மாத்தி மாத்தி படிக்ககூடாது :))